நீட் விவகாரம் குறித்து மாணவர்களின் குரலை முன்பே கேட்டிருக்க வேண்டும் – உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக்கிற்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
தமிழ்நாடு, 23 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் கல்வி முறை குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பதிவில் மத்திய அரசையும் கல்வி அமைப்பையும் கடுமையா
கமல்


தமிழ்நாடு, 23 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் கல்வி முறை குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பதிவில் மத்திய அரசையும் கல்வி அமைப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில்,

ஒரு குழந்தை அழுதபோதே நாம் அதன் குரலைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், பல குழந்தைகள் உயிரிழந்த பிறகே நாம் விழித்துக் கொண்டோம் என்று வேதனை தெரிவித்தார்.

மேலும், கற்றலுக்குப் பதிலாக பயிற்சி மையங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை, ஆர்வத்திற்குப் பதிலாக பதற்றம் நிலவும் சூழல், திறமைக்குப் பதிலாக முறைகேடுகள் முன்னிலை வகிக்கும் அமைப்பு முற்றிலும் சீரழிந்த ஒன்றாகும். மாணவர்களுக்கு பதில்களை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களைத் தடுப்புகளாலும் தடியடிகளாலும் எதிர்கொள்ளும் ஒரு நாடு தனது குழந்தைகளிடம் தோல்வியடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை குறிப்பிட்டு, நாட்டிற்கு உங்கள் மனசாட்சியும் வழிகாட்டுதலும் இன்னும் தேவை. எனவே, தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், இந்தியாவின் குழந்தைகளே, நீங்கள் உங்கள் கடமையைச் செய்துவிட்டீர்கள். இனி நாட்டின் கடமையை உங்களுக்காக நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் கனவுகள், நம்முடைய தவறுகளைவிட எப்போதும் பெரியதாக இருக்கட்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P