கோவையில், ஜூலை 25-ஆம் தேதி சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு
கோவை, 23 ஜூலை (ஹி.ச.) முல்லை அகாடமியா இன்டர்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மா
A


கோவை, 23 ஜூலை (ஹி.ச.)

முல்லை அகாடமியா இன்டர்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு 2026-ஐ ஜூலை 25 (சனிக்கிழமை) கோவை தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடத்துகிறது.

இதுகுறித்த அறிவிப்பு கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு சரியான மற்றும் நம்பகமான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளை நேரடியாகச் சந்தித்து, சேர்க்கை நடைமுறை, தகுதித் தரங்கள், கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகைகள், விடுதி வசதிகள், விசா நடைமுறைகள், மருத்துவ உரிமத் தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிந்தைய தொழில் வாய்ப்புகள் குறித்து முழுமையான விளக்கங்களைப் பெறலாம்.

அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விஜய்சங்கர் அசோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெறுவதற்கான சிறந்த தளமாக இந்த மாநாடு அமையும் என்றார்.

அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸின் சர்வதேச ஆலோசனை உறுப்பினர் டாக்டர் பிரசன்னா அசோகன் பேசுகையில்,

இந்திய மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளவும், சரியான பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்யவும் இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA