Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 ஜூலை (ஹி.ச.)
இளைஞர்களின் நலனும் எதிர்காலமும்தான் மிக முக்கியமானது என்றும், வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
வினாத்தாள் கசிவு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது விரைவான விசாரணை நடத்தி, கடுமையான தண்டனை வழங்கும் நோக்கில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P