நலவாழ்வுச் சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி, 24 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் சார்பாகத் தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா
நலவாழ்வுச் சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் -  திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு


திருநெல்வேலி, 24 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் சார்பாகத் தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் இணை இயக்குநர் நலப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர்

(Account Assistant - 1), மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist - 1), மனநலச் செவிலியர் (Psychiatric Staff Nurse - 1) ஆகிய 3 பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.

இப்பணிகள் தற்காலிகமானவை என்பதால் பிற்காலத்தில் நிரந்தரப் பணியோ, முன்னுரிமையோ அல்லது பிற சலுகைகளோ கோர இயலாது. இப்போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தினை https://tirunelveli.nic.in என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி மற்றும் உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 08.08.2026 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.16/22, பழைய காவல் மருத்துவமனை சாலை, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002 என்ற முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b