முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கே.டி.ஆர். சட்ட நோட்டீஸ் - 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
ஐதராபாத் , 24 ஜூலை (ஹி.ச.) குளோபரினா டெக்னாலஜீஸ் நிறுவனம் தொடர்பாக தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்.) சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளா
A


ஐதராபாத் , 24 ஜூலை (ஹி.ச.)

குளோபரினா டெக்னாலஜீஸ் நிறுவனம் தொடர்பாக தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்.) சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குளோபரினா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அந்த நிறுவனத்தில் தனக்கு நிதி ஆதாயம், உரிமை பங்கு அல்லது பினாமி தொடர்புகள் எதுவும் கிடையாது என்றும் கே.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் தனது பினாமி நிறுவனம் என்றும், அதற்கு அரசு ஒப்பந்தங்கள் பெற்றுத் தந்ததாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், ஆதாரமற்றவை என்றும் அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர், அரசியல் எதிர்ப்பாளரை குறிவைத்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறானது என்றும் கே.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு 48 மணி நேரத்துக்குள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கே.டி.ஆர். கோரியுள்ளார்.

அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், அவதூறு வழக்கு தொடர்வதுடன், சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA