Enter your Email Address to subscribe to our newsletters

ஈரான், 27 ஜூலை (ஹி.ச.)
அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தி வைத்தால் தாங்களும் தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்ததாக அறிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதையும், சவுதி அரேபியாவுக்கு எதிராக கடல் முற்றுகையை அறிவித்ததையும் தொடர்ந்து, பாப் அல்-மண்டேப் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று 11 சரக்கு கப்பல்கள் மட்டுமே அந்த நீர்வழியை கடந்து சென்றன. அமெரிக்க - ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், ஹார்முஸ் நீரிணை வழியான போக்குவரத்தும் வார இறுதியில் மந்தமாகவே இருந்தது.
காஸ்பியன் கடலில் தனது வணிகக் கப்பல் ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்த சம்பவம் பதிலளிக்காமல் விட முடியாது என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்டதாக தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரத்தில் ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய ராணுவ சரக்கு கப்பல்களை குறிவைத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தெஹ்ரானுக்கும் கீவுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானுடனான மோதலில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் குறைந்து வருவதாக வெளியான தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
உலகில் உள்ள எவரையும் விட எங்களிடம் அதிக ஆயுதங்கள் உள்ளன, எங்களுக்கு தேவையானதை விட அதிகமாகவே உள்ளன என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b