மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார், அதில் அவர் தெரிவித்ததாவது, மேகதாது அணை
Udhayanidhi Stalin


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்,

அதில் அவர் தெரிவித்ததாவது,

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த Sofa Model முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.

எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN