Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (29.07.2026) மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம். தொகுதி-1 பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம். தொகுதி-1 பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள். துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி). 15 உதவி 7 இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி). 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குறிப்பிடத்தக்கதாகும். தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது
தேர்வாணையத்தின் மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II 6T 60T மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம். தொகுதி-1 பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் முதலமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b