திருமலையில் தொடரும் பக்தர் கூட்டம் – தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி , 03 ஜூலை (ஹி.ச.) விடுமுறை காலம் முடிந்த பிறகும் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருமலையில் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் வருகை காரணமாக திருமலை
A


திருப்பதி , 03 ஜூலை (ஹி.ச.)

விடுமுறை காலம் முடிந்த பிறகும் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருமலையில் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வார இறுதி நாட்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் வருகை காரணமாக திருமலை முழுவதும் கடும் கூட்ட நெரிசல் நிலவுகிறது.

இதனால், டோக்கன் இல்லாமல் வரும் பொதுப் பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் பெற சுமார் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பியதால், வரிசை நாராயணகிரி ஷெட்கள் வரை நீள்கிறது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் தேவையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 66,304 பக்தர்கள் ஸ்ரீவாரியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் 31,811 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஒரே நாளில் திருமலை ஹுண்டியில் ரூ.4.51 கோடி காணிக்கை கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

க்யூ வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பால், குடிநீர் மற்றும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டோக்கன் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என TTD நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA