பப்புவாவில் பதற்றம் அதிகரிப்பு – அமெரிக்க விமானி சுட்டுக்கொலை
பப்புவா, 03 ஜூலை (ஹி.ச.) இந்தோனேசியாவின் கிழக்கே அமைந்துள்ள பப்புவாவில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரிவினைவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க விமானி நிக்கோலஸ் எஃப். கோசலின்-ன் உடலை இந்தோனேசிய படையினர் மீட்டுள்ளனர். வளங்கள் நிறைந்த இப்
பப்புவாவில் பதற்றம் அதிகரிப்பு – அமெரிக்க விமானி சுட்டுக்கொலை


பப்புவா, 03 ஜூலை (ஹி.ச.)

இந்தோனேசியாவின் கிழக்கே அமைந்துள்ள பப்புவாவில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரிவினைவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க விமானி நிக்கோலஸ் எஃப். கோசலின்-ன் உடலை இந்தோனேசிய படையினர் மீட்டுள்ளனர்.

வளங்கள் நிறைந்த இப்பகுதியில் தொடர்ந்து நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த தகவலை ராணுவம் இன்று அறிவித்தது.

தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஆயுதப் பிரிவான மேற்கு பப்புவா தேசிய விடுதலை ராணுவம் (TPNPB), கோசலின் சுட்டுக்கொல்லப்பட்டதையும், அவரது விமானம் அழிக்கப்பட்டதையும் அமெரிக்கா மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட துணிச்சலான எச்சரிக்கையாக விவரித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கும் இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் இடையே தீர்க்கப்படாத பிரச்சினைகள் மீதான விரக்தியை இந்த தாக்குதல் எடுத்துக்காட்டுவதாக மேற்கு பப்புவா தேசிய விடுதலை ராணுவம் செய்தித் தொடர்பாளர் செப்பி சாம்போம் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்டக்காரர்கள் மேலும் நவீன ஆயுதங்களைப் பெற்றுள்ள நிலையில், பப்புவாவில் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சமீபத்திய சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதுடன், மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவும் மோதலைத் தீர்க்க அரசாங்க தலையீடுகளுக்கும், சிறந்த மோதல் தீர்வு உத்திகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b