இன்று பீகார் பாங்கிப்பூர் இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம்
பீகார், 30 ஜூலை (ஹி.ச.) பீகார் மாநிலத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான 182-பாங்கிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று ஜூலை 30-ம் தேதி காலை 7 மணி முதல் மால
Bihar's Bankipur by-election today – polling begins.


பீகார், 30 ஜூலை (ஹி.ச.)

பீகார் மாநிலத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான 182-பாங்கிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று ஜூலை 30-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்று, முழு தேர்தல் நடைமுறையும் ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருந்த நிதின் நபின் கடந்த மார்ச் 30-ம் தேதி ராஜினாமா செய்ததை அடுத்து இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவர் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதால் இந்த இடம் காலியானது.

1995-ம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாக திகழும் பாங்கிப்பூரில் இந்த முறை போட்டி கடுமையாக உள்ளது. பாஜக சார்பில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவர் அபிஷேக் குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தானே நேரடியாக போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த இடைத்தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு பாட்னா மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் பலத்த பாதுகாப்புடன் செய்து முடித்துள்ளது.

நேற்று மாலையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b