அடித்துக் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் வனப்பகுதியில் வீச்சு - கோவையில் பரபரப்பு
கோவை, 31 ஜூலை (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் இது குறித்து வடவள்ளி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்
அடித்துக் கொலை செய்யப்பட்ட  வாலிபர் உடல்  வனப்பகுதியில் வீச்சு - கோவையில் பரபரப்பு


கோவை, 31 ஜூலை (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் இது குறித்து வடவள்ளி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கு உள்ள ஓடை அருகே கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். அப்பொழுது இறந்த கிடந்த வாலிபரின் தலை, கை, கால்கள் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை யாரோ ? அடித்துக் கொன்று உடலை வனப்பகுதியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் கல்வீரம்பாளையம் முருகன் நகரச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சசிகுமார் என்பதும், தங்கராஜ் பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஊழியராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.

எம்.பி.ஏ படித்து விட்டு வேலை தேடி வந்த சசிகுமாரை கொலை செய்தவர்கள் யார் ? கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலையாளி பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து வடவள்ளி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b