Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 31 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசு பேருந்தில் ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் புற்றுக்கோவில் அருகே அரசு பேருந்து சென்றபோது பேருந்தை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சிவசங்கரை அரிவாளால் சரமாறியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசங்கரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் பயணம் செய்த இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN