ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கழகத்தின் 20-ஆவது பட்டமளிப்பு விழா...!
கோவை, 04 ஜூலை (ஹி.ச.) ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் 20-ஆவது பட்டமளிப்பு விழாவை கொண்டாடியது. இந்த விழா, கழக வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி
க


கோவை, 04 ஜூலை (ஹி.ச.)

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் 20-ஆவது பட்டமளிப்பு விழாவை கொண்டாடியது.

இந்த விழா, கழக வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில்,

பட்டதாரி மாணவர்களை வெறும் அறிவு ஈட்டலுக்கு அப்பால், அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி முன்னேறுமாறு வலியுறுத்தினார்.

வெற்றிக்கும் புதுமைக்கும் பெற்ற அறிவினைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியம் என்று டாக்டர் சுந்தர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வி.எல்.எஸ்.ஐ. சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் முனைவர் சத்ய குப்தா கலந்துகொண்டார்.

இந்திய செமிகண்டக்டர் மிஷனை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றிய பெருமைக்குரிய முனைவர் குப்தா, நாட்டின் தொழில்நுட்பப் பயணம் குறித்து உத்வேகம் தரும் உரையாற்றினார்.

இன்று பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சர்வதேச பிராண்டுகளாக இருந்தாலும், வலுவான இந்திய தயாரிப்பு சூழலமைப்பை உருவாக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துரைத்தார்.

2047-ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தியா ஒரு சிறந்த நாடாக உருவெடுக்கும் என்றும், அந்த இலக்கை அடைவதற்கு உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் இறையாண்மை கொண்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / Durai.J