Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 ஜூலை (ஹி.ச.)
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த போர் பதற்றம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், டெல்லி அரசு அமல்படுத்தியிருந்த ஹைபிரிட் (Hybrid) பணி முறை உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதலால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் எரிபொருள் கிடைப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவிய நிலையில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் டெல்லி அரசு அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் வீட்டிலிருந்தே பணியாற்றும் (Work From Home) மற்றும் அலுவலகப் பணியை இணைத்த ஹைபிரிட் முறையை அறிமுகப்படுத்தியது.
தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தன.
தற்போது மத்திய கிழக்கில் பதற்றம் குறைந்து, எரிபொருள் விநியோக நிலைமை சீரடைந்து வருவதால், அவசர எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளின் தேவையும் குறைந்துள்ளதாக டெல்லி அரசு மதிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, ஹைபிரிட் பணி முறை உத்தரவு வாபஸ் பெறப்பட்டு, அரசு அலுவலகங்கள் மீண்டும் வழக்கமான முழுநேர அலுவலக செயல்பாட்டுக்கு திரும்பியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P