சூடுபிடிக்கும் நெல்லை இரட்டைக் கொலை வழக்கு - 8 பேரிடம் தீவிர விசாரணை
நெல்லை, 05 ஜூலை (ஹி.ச.) நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி பகுதியில் காளிமுத்து (வயது 48) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தலையை மட்டும் வெட்டி எடுத்த மர்ம கும்பல், 5 கிலோ மீட்டர் தூரத்தில் கல்லிடைக் குறிச்சி அருகே க
Nellai Double Murder Case


நெல்லை, 05 ஜூலை (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி பகுதியில் காளிமுத்து (வயது 48) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது தலையை மட்டும் வெட்டி எடுத்த மர்ம கும்பல், 5 கிலோ மீட்டர் தூரத்தில் கல்லிடைக் குறிச்சி அருகே கரம்பை நெடுஞ்சாலையில் வைத்து விட்டு சென்றது.

இந்த சம்பவத்தின் போது காளிமுத்து வந்த இரு சக்கர வாகனத்தின் மீது காரை கொண்டு பலமாக மோதியதில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவன் சின்னதுரை (வயது 15) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் நேற்று மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த 13 பேரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது 8 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Hindusthan Samachar / ANANDHAN