Enter your Email Address to subscribe to our newsletters

புனே, 06 ஜூலை (ஹி.ச.)
மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கனமழையால் புனே–மங்காவ்ன் (Paud–Mangaon) வழித்தடத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை (NH-753F) அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கும் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூடப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த சாலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தாம்ஹிணி காட் (Tamhini Ghat) வழியாகச் செல்கிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழையால் சாலையின் பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம், பாறைகள் உருண்டு விழும் ஆபத்து மற்றும் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தை தொடர்வது பாதுகாப்பற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, புனே மற்றும் ராய்கட் மாவட்ட நிர்வாகங்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் இந்த வழித்தடத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்றும், மாற்று சாலைகளை பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
சாலை நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழையின் தீவிரம் குறைந்து பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடைந்த பிறகே போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மும்பை–புனே விரைவுச்சாலை மற்றும் பழைய மும்பை–புனே நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்ஜத்–லோணாவாலா மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இரண்டிலும் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P