மின் தடைக்கு முற்றுப்புள்ளி- தமிழகம் முழுவதும் புதிய நடவடிக்கை
சென்னை, 08 ஜூலை (ஹி.ச) தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் தடைகளைத் தடுக்கும் நோக்கில், மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படுவதைத் தடுக்கும் திட்டம் (RTEP)-ஐ உடனடியாக செயல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்
மின் தடைக்கு முற்றுப்புள்ளி- தமிழகம் முழுவதும் புதிய நடவடிக்கை


சென்னை, 08 ஜூலை (ஹி.ச)

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் தடைகளைத் தடுக்கும் நோக்கில், மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படுவதைத் தடுக்கும் திட்டம் (RTEP)-ஐ உடனடியாக செயல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில்,

மாநிலம் முழுவதும் பெரும்பாலும் தடையற்ற மற்றும் நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அதற்கான காரணங்களை ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடுப்புப் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுவதுடன், மின் தடை ஏற்பட்டால் விரைவாக மின் விநியோகத்தை மீட்டமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அத்துடன், மின் விநியோக அமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், மின் கோளாறுகளை குறைத்தல் மற்றும் நுகர்வோருக்கு தரமான சேவையை வழங்குதல் ஆகியவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / vidya.b