நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தெலங்கானா இடம் பெற்றிருப்பது பெருமைக்குரிய சாதனை -ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ்
ஐதராபாத் , 08 ஜூலை (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் மேல் நடுத்தர வருமான நிலையை கடந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.
A


ஐதராபாத் , 08 ஜூலை (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் மேல் நடுத்தர வருமான நிலையை கடந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

தெலங்கானா திவாலாகிவிட்டது என்று தவறான பிரசாரம் செய்தவர்களுக்கு உலக வங்கியின் அறிக்கையே உரிய பதிலாக அமைந்துள்ளது.

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தெலங்கானா இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவின் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிட்ட நிர்வாகத்தால் இந்த வளர்ச்சி சாத்தியமானதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பின்தங்கிய நிலையில் இருந்த தெலங்கானா இன்று பொருளாதார ரீதியாக வலுவான மாநிலமாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தெலங்கானா மக்கள் ஏழைகள் அல்ல என்றும், தங்களது உழைப்பு, திறமை மற்றும் அறிவாற்றலால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

“தெலங்கானா உருவான பிறகு மாநிலத்தின் செல்வமும், மக்களின் வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தேசிய அளவிலான அறிக்கைகள் மட்டுமின்றி, தற்போது சர்வதேச அமைப்புகளும் அங்கீகரித்துள்ளன.

அரசியல் நோக்கத்துடன் தெலங்கானா திவாலாகிவிட்டது என்று கூறுபவர்களுக்கு உலக வங்கியின் இந்த அறிக்கை வலுவான பதிலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA