Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோயம்புத்தூரில் உள்ள ஜோய்ஆலுக்காஸின் 100 அடி சாலை ஷோரூம் புதுப்பொலிவுடன் பிரமாண்டமாக மறு திறக்கப்பட்டது.
இதனையொட்டி, கட் மற்றும் அன்கட் வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பிரீமியம் ஆபரணங்கள் உள்ளிட்ட புதிய வடிவமைப்புகளுடன் ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’ தொடங்கப்பட்டுள்ளது.
மறுதிறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்குவோருக்கு ஒரு கிராமுக்கு ரூ.150 கூடுதல் மதிப்பு வழங்கப்படுகிறது.
மேலும், மறுதிறப்பின் முதல் மூன்று நாட்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொள்முதலுக்கும் உறுதியான பரிசு வழங்கப்படுவதுடன், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் வாங்குவோருக்கு இலவச தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.
மூன்று தளங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம், நவீன உட்புற வடிவமைப்பு, விசாலமான ஷாப்பிங் வசதி, சர்வதேச தரத்திலான சூழல் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிட வசதியுடன் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மற்றும் நவீன ஆபரண வடிவமைப்புகளை ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில்,
100 அடி சாலை ஷோரூமை மணப்பெண் நகைகள் மற்றும் பிரீமியம் ஆபரணத் தொகுப்புகளுடன் புதுப்பொலிவுடன் மீண்டும் திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
'பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ' மூலம் புதுமையான வைர நகை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
கோவை மக்களுக்கு சிறந்த ஆபரண ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதே எங்களது நோக்கம், என்றார்.
ஜூலை 31 முதல் தொடங்கியுள்ள இந்த சிறப்பு கண்காட்சியில் புதிய ஆபரண வடிவமைப்புகள், பிரத்யேக சலுகைகள் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் அனுபவத்தை பெற ஆபரண ஆர்வலர்களுக்கு ஜோய் ஆலுக்காஸ் அழைப்பு விடுத்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P