மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை
நெல்லை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துற
Manimuthar Falls


நெல்லை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் வேகமாக கொட்டி வருவதால், எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான பகுதிகளில் இருந்து அருவியின் இயற்கை அழகை ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அருவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வேலிகளை தாண்டிச் செல்லக்கூடாது என்றும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே மீண்டும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதுவரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN