Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, யாஷ் வீர் சிங் மற்றும் யாமினி மௌரியா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
கிளாஸ்கோவில் நடைபெறும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு அபார வெள்ளிப் பதக்கம்!
அவர் மீண்டும் ஒருமுறை குறிப்பிடத்தக்க நிலைத்தன்மை, நிதானம் மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றிகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யாஷ் வீர் சிங்கிற்கு வாழ்த்துக்கள்! அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான எறிதலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது சாதனை பல இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மௌரியாவுக்கு வாழ்த்துக்கள்!
அவர் மிகச் சிறப்பாக விளையாடினார், ஜூடோ மீதான அவரது ஆர்வம் அவரது செயல்திறனில் தெளிவாக பிரதிபலித்தது.
அவரது சாதனை வரும் காலங்களில் பல இளைஞர்களை ஜூடோவை நோக்கி ஈர்க்கும். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b