திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நிறைவு – ரூ.5.57 கோடி ரொக்கம், 1.31 கிலோ தங்கம் காணிக்கை
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோயில் நிர்வாகத்தின் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்றன. கோயிலில் பக்தர்கள் செலுத்திய உ
Thiru


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோயில் நிர்வாகத்தின் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்றன.

கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் திறக்கப்பட்டு, அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் பணம் மற்றும் பிற காணிக்கைகள் முறையாக எண்ணப்பட்டன.

இந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் முடிவில், மொத்தமாக ரூ.5 கோடியே 57 லட்சம் ரொக்கம், 1.31 கிலோ தங்கம், 23.25 கிலோ வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் காணிக்கையாக கிடைத்துள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், ஆடி மாதம் மற்றும் விழாக்காலத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்ததால், உண்டியல் காணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காணிக்கையாக பெறப்பட்ட ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கோயிலின் நடைமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ