ஜார்க்கண்ட் ஜெ.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - தொடரும் மாணவர்கள் போராட்டம்
ஜார்க்கண்ட், 10 ஆகஸ்ட் (ஹி.ச.) ஜார்க்கண்டில் 14-வது ஜெ.பி.எஸ்.சி (JPSC) முதன்மைத் தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மாணவர்கள் கடந்த 16 நாட்களாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்
Jharkhand JPSC Exam Irregularities – Students' Protest Continues


ஜார்க்கண்ட், 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஜார்க்கண்டில் 14-வது ஜெ.பி.எஸ்.சி (JPSC) முதன்மைத் தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மாணவர்கள் கடந்த 16 நாட்களாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சூழ்நிலையில், மாநிலக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது தனது அதிரடி விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்க, மாநிலக் காவல் துறையின் சிஐடி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் பிற புகார்களை மத்திய முகமை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

போராட்டக்காரர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மூன்று தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு ஒப்புக்கொண்டது.

இருப்பினும், இவிவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.

இன்றும் (ஆகஸ்ட் 10 ) போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாங்கள் இன்று போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. JSSC-CGL தேர்வை ரத்து செய்வது எங்கள் முதல் கோரிக்கை; இரண்டாவது, சிபிஐ விசாரணை என்று தெரிவித்தனர்.

அரசு 98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய போதிலும், மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.

மேலும் அவர்கள் இன்று மாநிலச் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி செல்லத் தயாராகி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b