Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கம், அதன் கம்பீரம், வலிமை மற்றும் தைரியத்திற்குப் பெயர் பெற்றது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் சிங்கங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆனால், மனிதர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக சிங்கங்களின் எண்ணிக்கை உலகளவில் மிக வேகமாக சரிந்து வருகிறது.
இந்த கம்பீரமான விலங்கினத்தைக் காப்பாற்ற வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் ஆகஸ்டு 10-ந்தேதி உலக சிங்க தினம் கொண்டாடப்படுகிறது.
உலக சிங்க தினம் 2013 ஆம் ஆண்டு பிக் கேட் ரெஸ்க்யூ
(Big Cat Rescue) அமைப்பின் நிறுவனர்களான டெரிக் மற்றும் பெவர்லி ஜோபர்ட் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
சிங்கங்களின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பது, வேட்டையாடுதலைத் தடுப்பது மற்றும் சிங்கங்களின் அழிவால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக நாடுகளை எச்சரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
சிங்கங்கள் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருக்கும் ஒரு முக்கிய இனம் ஆகும்.அவை மான், காட்டு எருமை போன்ற தாவர உண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.
இதன் மூலம் காடுகளின் புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.சிங்கங்கள் இல்லையென்றால், தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காடுகள் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும்
தற்போது சிங்கங்கள் ஐயூசிஎன் (IUCN) சிவப்புப் பட்டியலில் அழிவாய்ப்பு இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான முக்கிய காரணங்கள் pinvarumaru:
வாழ்விட இழப்பு : காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், மனித குடியிருப்புகளாகவும் மாற்றப்படுவது.
மனித-விலங்கு மோதல்: வாழ்விடம் சுருங்குவதால் சிங்கங்கள் கிராமங்களுக்குள் நுழைந்து, கால்நடைகளைக் கொல்வதால் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன.
சட்டவிரோத வேட்டை: சிங்கங்களின் தோல், நகங்கள் மற்றும் எலும்புகளுக்காக அவை சட்டவிரோதமாகக் கொல்லப்படுகின்றன.
இந்தியாவில் சிங்கங்கள் (ஆசிய சிங்கங்கள்)உலகில் ஆப்பிரிக்க சிங்கங்களுக்கு அடுத்தபடியாக ஆசிய சிங்கங்கள் வாழும் ஒரே இடம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காஆகும்.
ஒரு காலத்தில் அழியும் விளிம்பில் இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, இந்திய அரசின் தீவிர பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் ப்ராஜெக்ட் லயன் போன்ற திட்டங்கள் மூலம் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சிங்கங்கள் வெறும் கம்பீரத்தின் அடையாளம் மட்டுமல்ல, அவை நம் இயற்கை அன்னையின் சமநிலையைப் பாதுகாக்கும் காவலர்கள். சிங்கங்களைப் பாதுகாப்பது என்பது காடுகளையும், ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்குச் சமம்.
இந்த உலக சிங்க தினத்தில், வனவிலங்கு பாதுகாப்பிற்கு நம்மால் இயன்ற ஆதரவை வழங்கவும், காடுகளைப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
Hindusthan Samachar / vidya.b