Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவைக் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி வரை www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அனைத்து கட்ட நடவடிக்கைகளும் நிறைவடைந்து, முதலாம் ஆண்டு எம்.எட். மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b