மாணவர்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக மரபுகளையும் சீர்குலைக்கும் பா.ஜ.க அரசு - மாணிக்கம் தாகூர்
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர், இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் அவை நடவ
Manickam Tagore


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர், இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில்,

கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் அவை நடவடிக்கைகளுக்கோ, மாணவர்கள் போராட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கோ வராமல் புறக்கணித்துவிட்டு, கடைசி நாளில் மட்டும் பிரதமர் மோடி அவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் வெறும் 'Guest Appearance' தந்துள்ளது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

நாடாளுமன்றத்தை முன்னின்று வழிநடத்த வேண்டிய பிரதமர் மோடியும் பதில் சொல்ல வேண்டிய அமீத் ஷாவும், ஒட்டுமொத்த கூட்டத்தொடர் முழுவதும் அவைப் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த ஒரு நிகழ்வை, வரலாற்று ஆய்வாளர்களாலேயே தேடிப் பிடிக்க முடியாமல் திணறும் அளவுக்கு ஒரு மோசமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றி, மாணவர்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக மரபுகளையும் சீர்குலைக்கும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN