Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் படிக்கட்டுகளில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் எதிர் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளாததைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக காங்கிரஸ் எம்.பி. பவன் கேரா தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய முழக்கங்களை எழுப்பினர். பொம்மை குரங்கை வைத்துக்கொண்டு 56 இன்ச் கா சோட்டா பந்தர், ஜல்தி ஆவோ சதன் கே அந்தர் என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, தேசிய கீதமான வந்தே மாதரம் இசைக்கப்பட்ட பின்னர் மக்களவை இன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பொதுவாக நாடாளுமன்றத்தில் மக்களுக்கான கேள்விகளுக்கு ஆளும் அரசுதான் பதிலளிக்க வேண்டும். ஆனால், இங்கு ஆளும் கட்சியே போராட்டம் நடத்துவது முரண்பாடாக உள்ளது என்று சாடியுள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல் முன்னெப்போதும் இல்லாதது என கூறிய பிரியங்கா காந்தி வத்ரா இதை நான் முதல் முறையாகப் பார்க்கிறேன். இது புதிதாக இருக்கிறது என்று கூறினார்.
தேர்வுத்தாள் கசிவு மற்றும் போராடும் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை போன்ற இளைஞர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கவும், முக்கியமான மக்கள் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவுமே அரசு திட்டமிட்டு இதுபோன்ற முட்டுக்கட்டைகளை உருவாக்குகிறது என்று பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b