Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று ஏராளமான மீனவர்கள் நேற்று மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்று கச்சத்தீவு - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி ஒரு படகையும் அதில் இருந்த ஒன்பது மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக சிறை பிடிப்பது வாடிக்கை நிகழ்வாக உள்ளது.
இதை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
புதிதாக அமைந்த அரசு மீனவர் பிரச்சனை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்த நிலையில், தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கும் நிலையில் மீனவர் பிரச்சனை குறித்து இதுவரை மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
எனவே தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களையும் படகையும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN