மூவர்ணக் கொடியை இல்லத்தில் ஏற்றிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா - திரங்கா அபியானில் பங்கேற்க அழைப்பு
புதுடெல்லி, 13 ஆகஸ்ட் (ஹி.ச) ''திரங்கா யாத்திரை'' மற்றும் ''திரங்கா அபியான்'' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து தேசிய
மூவர்ணக் கொடியை இல்லத்தில் ஏற்றிய மத்திய அமைச்சர்  ஜே.பி.நட்டா - திரங்கா அபியானில் பங்கேற்க அழைப்பு


புதுடெல்லி, 13 ஆகஸ்ட் (ஹி.ச)

'திரங்கா யாத்திரை' மற்றும் 'திரங்கா அபியான்' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் கூறுகையில்,

ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் 'திரங்கா யாத்திரை' மற்றும் 'திரங்கா அபியான்' கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இதன் கீழ் ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் திரங்கா யாத்திரைகள் நடத்தப்பட வேண்டும், அதில் மக்கள் தேசபக்தி பாடல்களுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு 2022ல் பிரதமர் மோடி, இது வெறும் அரசாங்க நிகழ்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது, மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று கூறியதை நாம் அனைவரும் அறிவோம். அன்று முதல் கோடிக்கணக்கான வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இன்று எனது இல்லத்தில் குடும்பத்துடன் மூவர்ணக் கொடியை ஏற்றும் பாக்கியம் எனக்கும் கிடைத்துள்ளது. நான் மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்த மக்கள் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இந்த தேசபக்தி உணர்வுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உறுதிமொழி எடுத்து வருகிறோம்.

இந்தியாவை தன்னிறைவு பெற்றதாகவும், வளர்ந்த இந்தியாவாகவும் மாற்ற வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க தேசபக்தி உணர்வு மிகவும் அவசியமான அம்சம்.

எனவே இந்த மக்கள் இயக்கமான திரங்கா யாத்திரை மற்றும் வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றும் பிரச்சாரத்தில் நானும் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். இந்த திரங்கா யாத்திரை வெற்றி பெறவும், வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றுவதன் மூலம் தேசபக்தி உணர்வு மேலும் வலுப்பெறவும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b