மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
நாசிக், 14 ஆகஸ்ட் (ஹி.ச.) மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான நாசிக் நகரில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வ
Mild earthquake in Nashik, Maharashtra


நாசிக், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான நாசிக் நகரில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாசிக் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், குறிப்பாக திண்டோரி தாலுகா பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இந்த அதிர்வு நன்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வால் பொதுமக்கள் சில நொடிகள் பீதி அடைந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதாகவும், சில இடங்களில் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரிக்டர் அளவில் 3.4 என்பது குறைந்த அளவு என்பதால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் நிபுணர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b