சென்னையில் நடைபெறும் அரசின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு நடிகை த்ரிஷா வருகை
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு மொத்த நாடுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக தாங்கள் சந்தித்த தேர்தலிலே வெற்றி பெற்றுள்ள தமிழக
Trisha


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு மொத்த நாடுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக தாங்கள் சந்தித்த தேர்தலிலே வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு கொண்டாடும் முதல் சுதந்திர தினம் இதுவாகும்.

சென்னை கோட்டையில் இன்று நடக்கும் 80வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசிய கொடியேற்ற உள்ளார். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையும், முதலமைச்சர் விஜய்யின் தோழியுமான த்ரிஷாவும் பங்கேற்றுள்ளார். அவர் தனது தாயாருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அவர் முதலமைச்சர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது தாயார் ஷோபா அருகே விழா மேடையில் அமர்ந்துள்ளார்.

விஜய் கட்சி தொடங்கிய பிறகு அவரது மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கில், த்ரிஷா மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற போது அவருக்கு வீட்டிற்கே சென்று த்ரிஷா வாழ்த்து கூறினார். பின்னர், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்த சூழலில், விஜய் கோட்டையில் கொடியேற்ற நிகழ்ச்சியிலும் த்ரிஷா தற்போது பங்கேற்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் திமுக நடத்திய போராட்டத்தில் த்ரிஷா என்று திமுக தொண்டர்கள் கத்தியபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவரை போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN