ராஜஸ்தானில் ரூ.6,262 கோடி திட்டங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்
ஆல்வார், 16 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடியின் சஹ்கார் சே சம்ரித்தி என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள ஆல்வார் சரஸ் பால் பண்ணை வளாகத்தில் புதிய பால் பதப்பட
Amit Shah launched projects worth ₹6,262 crore in Rajasthan.


ஆல்வார், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடியின் சஹ்கார் சே சம்ரித்தி என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள ஆல்வார் சரஸ் பால் பண்ணை வளாகத்தில் புதிய பால் பதப்படுத்தும் ஆலைக்கு அடிக்கல் நாடினார்.

இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான பால் பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் கால்நடை தீவன ஆலைகளையும் அமித் ஷா காணொலி மூலம் திறந்து வைத்தார்.

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மூலம் நிதியை தொலைதூரத்தில் இருந்து அவர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் ராஜஸ்தானின் 17 மாவட்டங்களில் ரூ.6,262 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது.

ரோஸ்கர் உத்சவ் திட்டத்தின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்ட 10,548 பணியாளர்களுக்கு நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் சஹ்கார் சே சம்ரித்தி மந்திரத்திற்கு இணங்க இந்த முயற்சி, கூட்டுறவு நிறுவனங்களை நவீனப்படுத்தவும், அவற்றை திறமையானதாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றவும், கூட்டுறவு மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கவும் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Hindusthan Samachar / vidya.b