PMIS திட்டம் முடக்கம் -மோடி அரசை விமர்சித்த மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்திய அரசின் பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) செயல்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மத்திய அரசை விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வ
மாணிக்கம்


தமிழ்நாடு, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்திய அரசின் பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) செயல்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் ₹63,000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட PMIS திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

2024-25 நிதியாண்டில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் ₹29.29 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், 98.5 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், வெறும் 16,060 பேர் மட்டுமே திட்டத்தில் சேர்ந்ததாகவும், அவர்களில் 53.6 சதவீதம் பேர் பயிற்சியை பாதியிலேயே கைவிட்டதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

போதிய உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண் பயிற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செங்கோட்டையில் விளம்பர வெளிச்சத்திற்காக பேசுவதற்குப் பதிலாக, இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய மாணிக்கம் தாகூர், “இளைஞர்களை ஏமாற்ற முடியாது” என பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P