சட்டப்பேரவையில் இன்று மூன்று துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் - அமைச்சர்கள் பதிலுரை
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்ச்சி நிரலின்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்
Debate on demands for grants for three departments in the Legislative Assembly today


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இன்றைய நிகழ்ச்சி நிரலின்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், கட்டிட பராமரிப்பு மற்றும் அரசு ஊழியர்கள் நலன் தொடர்பான அறிவிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெறுகிறது.

இத்துறையின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை, புதிய விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள்.

நடைபெற்ற விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் இன்றே பதிலுரை வழங்கி, புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b