சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – 2-வது நாளாக நீடிக்கும் நடவடிக்கை
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை 2-வது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை ராஜமங்கலத்தில் பெண் ஆடிட்டர் ஒருவரின் வீடு, எர்ணாவூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்
It raid


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை 2-வது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை ராஜமங்கலத்தில் பெண் ஆடிட்டர் ஒருவரின் வீடு, எர்ணாவூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை போரூர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இரவு 10.30 மணியளவில் நிறைவடைந்தது.

மேலும், தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெருங்குடியில் 4 இடங்களிலும், அண்ணா நகரில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Hindusthan Samachar / P YUVARAJ