மொத ராத்திரி திரைப்படம் நிச்சயம் மகிழ்விக்கும் - நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது என்பதற்கு சான்றாக இந்த வருடம் வெளியான நல்ல கதைக்களங்களைக் கொண்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. உதாரணமாக ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களை சொல்லலாம். பான
க


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது என்பதற்கு சான்றாக இந்த வருடம் வெளியான நல்ல கதைக்களங்களைக் கொண்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

உதாரணமாக ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களை சொல்லலாம். பான் இந்திய அளவில் பிரம்மாண்டமான திரைப்படங்களையும், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைகளையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ரசிகர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தமிழ் திரைப்படமான ‘மொத ராத்திரி’ (ஆகஸ்ட் 21) அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ராஜா கருப்பசாமி இயக்குநராக அறிமுகமாகிறார்.

ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது,

தமிழ் ரசிகர்கள் நல்ல கதைகளை எப்போதுமே கொண்டாடுவார்கள். குறிப்பாக, இந்த வருடம் வெளியான ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ போன்ற நல்ல திரைப்படங்களுடன் ரசிகர்கள் தங்களை பொருத்தி கொண்டதால் வரவேற்பைப் பெற்றன.

ஒரு தயாரிப்பு நிறுவனமாக, பிரம்மாண்டமான பான் இந்திய வெற்றிப் படங்கள் முதல் குடும்பம், உணர்வுகள் மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான சினிமாவை வழங்குவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அந்த நம்பிக்கையிலிருந்துதான் ‘மொத ராத்திரி’ திரைப்படம் உருவாகியுள்ளது.

‘மொத ராத்திரி’ திரைப்படம் நாளை ரசிகர்களைச் சென்றடைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

ரிஷிகாந்த், அனிஷ்மா மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ராஜா தனது தெளிவான அணுகுமுறை, படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றால் எங்களை மிகவும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரங்களை அவர் கையாண்ட விதத்திலிருந்து, படப்பிடிப்புத் தளத்தில் அவர் செயல்பட்ட விதம் வரை, ஒரு அறிமுக இயக்குநருக்குரிய அனுபவத்தைத் தாண்டிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

திட்டமிட்ட காலத்திற்குள் அவர் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றனர்.

இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்க, அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன் மற்றும் கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசையமைக்க, சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அசோக் அர்ஜுனன் படத்தொகுப்புப் பணியை கவனித்துள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

புதிய களத்தையும் புது திறமையாளர்களையும் அறிமுகப்படுத்தும் தமிழ் சினிமாவின் மற்றொரு புதிய முயற்சி ‘மொத ராத்திரி’ திரைப்படம் என்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Hindusthan Samachar / Durai.J