Enter your Email Address to subscribe to our newsletters

அமெரிக்கா, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்களது ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய கூட்டுப் பயிற்சியான உல்சி ஃபிரீடம் ஷீல்ட் பயிற்சியின் காலம் பதினோரு நாட்களில் இருந்து வெறும் ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பங்கேற்பை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் உத்தரவை அடுத்தே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில பயிற்சி நடவடிக்கைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன, மற்றவை நேரடி களப்பயிற்சிக்கு பதிலாக கணினி மூலமான போர் ஒத்திகைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த குறைப்பு இருந்தபோதிலும், அத்தியாவசிய பாதுகாப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி நோக்கங்களில் எந்த சமரசமும் இல்லை என்று இரு நாட்டு அதிகாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
வடகொரிய அச்சுறுத்தலுக்கு எதிரான தற்காப்பு நிலையில் எந்த தொய்வும் ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வடகொரியா இந்த பயிற்சிகளை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்று கடுமையாக கண்டித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய பயிற்சிகள் நடைபெறும்போது பியாங்யாங் இதே போன்ற கண்டனங்களை தெரிவிப்பது வழக்கம்.
இந்த ராணுவ நகர்வுகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையே மீண்டும் ஒரு சந்திப்பு நடைபெறலாம் என்ற ஊகங்களும் வலுத்துள்ளன.
அப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம் என்று ராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.
Hindusthan Samachar / vidya.b