Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையில் தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பாக தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு சுழற்கோப்பை–2026 மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பி.எஸ்.ஜி.சர்வஜன பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டு, நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவில், கோவை மாவட்டத்தின் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னதாக போட்டிகளை விளையாட்டு கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
இந்த சுழற்கோப்பை போட்டிகளில் கபடி, வாலிபால், கோ-கோ, த்ரோ பால், கூடைப்பந்து மற்றும் பூப்பந்து ஆகிய ஆறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன...
மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனியாக 18 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருவதால்,பிரம்மாண்ட மைதானத்தில்,விறுவிறுப்பான ஆட்டங்கள் நடைபெற்றன..
துவக்க விழாவில் கலந்து கொண்ட இந்திய கோ கோ அணி வீரரும் கோ கோ உலக சாம்பியன் போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீரர் சுப்ரமணியம் பேசுகையில்,
தற்போது கோ கோ விளையாட்டில் மாணவ,மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும்,மற்ற விளையாட்டுகளுக்கு வேலை வாய்ப்புகளில் முன் னுரிமை வழங்குவது போல கோ கோ விளையாட்டிற்கும் முன்னுரிமக வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA