போனாலு திருவிழாவுக்கு மாநில திருவிழா அந்தஸ்து கே.சி.ஆர். ஆட்சியில்தான் வழங்கப்பட்டது - கே.டி.ஆர்
சிக்கந்தராபாத் , 02 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் சிக்கந்தராபாத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற போனாலு திருவிழாவில் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் அவர் சிறப
A


சிக்கந்தராபாத் , 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம் சிக்கந்தராபாத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற போனாலு திருவிழாவில் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராமராவ், போனாலு திருவிழா சாதி, மத வேறுபாடுகளை கடந்து தெலங்கானா மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரியமிக்க விழா என்று கூறினார்.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச ஆட்சிக் காலத்தில் போனாலு திருவிழாவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், மாநில திருவிழா அந்தஸ்து வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, முன்னாள் முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியில்தான் போனாலு திருவிழாவுக்கு மாநில திருவிழா அந்தஸ்து வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அம்மன் அருளால்தான் தெலங்கானா மாநிலம் உருவானது என்று கே. சந்திரசேகர் ராவ் எப்போதும் கூறி வந்ததாகவும், அவரது ஆட்சியில் கோவில்கள் மற்றும் பாரம்பரிய விழாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் கே.டி. ராமராவ் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் அனைவரும் வளமுடன் வாழவும் உஜ்ஜயினி மகாகாளி அம்மனை வேண்டிக் கொண்டதாகவும், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA