Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட வீடியோவில்,
காங்கிரஸ் கமிட்டி ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடாமல், இரண்டு சரணங்களை மட்டும் பாட முடிவு செய்திருப்பது தேச விரோதமானது மட்டுமல்ல; நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை வெளிப்படையாக மீறுவதாகவும் உள்ளது.
1937ஆம் ஆண்டு, வாக்கு வங்கி அரசியலுக்காக சமரசம் செய்யும் நோக்கில் ‘வந்தே மாதரம்’ பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது காங்கிரஸ் கட்சிதான். அதன் தொடர்ச்சியாக இரு தேசக் கொள்கைக்கு வலு கிடைத்து, இறுதியில் நாட்டின் பிரிவினைக்கும் வழிவகுத்தது. ‘வந்தே மாதரம்’ பாடலின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி, மோடி அரசு அந்த வரலாற்றுத் தவறை சரிசெய்து, முழுப் பாடலுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது. ஆனால் ராகுல் காந்தியின் தலைமையில், காங்கிரஸ் மீண்டும் தனது வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு சமரச அரசியலின் பாதையில் செல்கிறது.
‘வந்தே மாதரம்’ பாடலைப் பிரித்த தவறு ஒருமுறை நடந்தது; அதன் விளைவுகளை நாடு ஏற்கனவே சந்தித்துவிட்டது. காங்கிரஸின் இந்த சமரச அரசியலுக்கு எதிராக நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது குரலை எழுப்ப வேண்டும் என்பதே இந்த வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில்,
1937ஆம் ஆண்டு தீர்மானத்தைத் தொடர்ந்து, ‘வந்தே மாதரம்’ பாடலின் இரண்டு சரணங்களை மட்டுமே பாட காங்கிரஸ் முடிவு செய்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த அழியாப் புகழ்பெற்ற பாடலின் 150ஆவது ஆண்டு விழாவில், தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் மீண்டும் சமரச அரசியலையும் வாக்கு வங்கி அரசியலையும் தேர்வு செய்துள்ளது.
இது பங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் காலத்தால் அழியாத படைப்பையும், ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்துடன் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
ராகுல் காந்தியின் தலைமையில், காங்கிரஸ் தொடர்ந்து நாட்டின் நலனைவிட சமரச அரசியலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN