மும்மொழிக் கொள்கை விவகாரம்- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) சிபிஎஸ்இ பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழ
உச்சநீதிமன்றம்


புதுடெல்லி, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

சிபிஎஸ்இ பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளை கற்க வேண்டும் என்ற புதிய நடைமுறை தொடர்பாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, திடீரென மொழிக் கொள்கையை அமல்படுத்துவதால் மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படுவதுடன், போதிய ஆசிரியர்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் இல்லாதது போன்ற நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பிடம் விளக்கம் கோரியுள்ளது.

மேலும், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பது குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்பது தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பின்னர், புதிய நடைமுறையை 6-ஆம் வகுப்பு முதல் அமல்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

மாணவர்களின் கல்வியில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தாமல், நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam