டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கார்த்திக் ஜாமீன் மனு – காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச) டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது மற்றும் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், ஜாமீன் கோரி சென்னை உயர்ந
High court


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச)

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது மற்றும் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனு, நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்திக்கின் ஜாமீன் கோரிக்கை தொடர்பாக காவல்துறை தனது பதிலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், காவல்துறையின் பதிலைப் பெற்ற பின்னர் மனு மீது அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்து, வழக்கின் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனால், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கின் ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ