Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்தை கடந்து ரூ.15,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் ஒரு பவுன்
(8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,20,240-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,950-க்கும், ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனுடன் ஒப்பிடும்போது இன்று ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.15,030, ஒரு பவுன் ரூ.1,20,240, ஒரு கிராம் வெள்ளி ரூ.275 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ