Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
மிலாது நபி தினத்தை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி புதன்கிழமை இயங்காது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜிப்மர் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மிலாது நபி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவு சேவைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு வழக்கமான சிகிச்சைக்காக வருவதை நோயாளிகள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கும் வகையில் இதனை கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் எந்தவித தடையுமின்றி செயல்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிலாது நபி தினத்தையொட்டி ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு ஒரு நாள் மட்டும் இயங்காத நிலையில், அடுத்த நாள் முதல் வழக்கம்போல் OPD சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN