சிவகிரியில் 62 சட்டவிரோத மதுபாட்டில்கள் பறிமுதல் -ஒருவர் கைது
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச) சிவகிரி காவல் நிலைய போலீசார், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விஸ்வநாதபேரி, தெற்குச்சத்திரம், ராயகிரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராயகிரிக்கு கிழக்கே உ
Tas


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச)

சிவகிரி காவல் நிலைய போலீசார், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விஸ்வநாதபேரி, தெற்குச்சத்திரம், ராயகிரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ராயகிரிக்கு கிழக்கே உள்ள சுடுகாடு அருகே ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர்.

அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் பாலமுருகன் (40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் 62 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பாலமுருகனை கைது செய்த போலீசார், அவரை சிவகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ