Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
மக்களின் நலன் கருதி, அரசின் மகத்தான திட்டமான அன்னபூரணி சூப்பர் ஆறு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலும் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு சட்டமன்றத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த திட்டத்தின் பயன்கள் குறிப்பிட்ட வருமான வரம்புக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் முதலமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அதன்படி, ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பங்கள் மட்டுமே இந்த இலவச சிலிண்டர் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த நிபந்தனை வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் வரும் பொங்கல் திருநாள் முதல் முறைப்படி செயல்பாட்டுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு இந்த பரிசை வழங்குவதில் அரசு பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார்.
பொங்கல் முதல் அன்னபூரணி சூப்பர் ஆறு திட்டம் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூபாய் 4000 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் நலனே முக்கியம் என்பதால் இந்த நிதிச்சுமையை அரசு ஏற்க தயாராக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b