மேட்டூர் அணையில் நீர் திறக்க ஏற்பாடு - டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி
சேலம், 26 ஆகஸ்ட் (ஹி.ச.) மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 89 அடியை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் தருணம் நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் நாளை மறுநாள் நேரில் சென்று அணையில் இருந்து தண்
மேட்டூர் அணையில் நீர் திறக்க ஏற்பாடு - டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி


சேலம், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 89 அடியை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் தருணம் நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் நாளை மறுநாள் நேரில் சென்று அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய நீர்வரத்து இல்லாததாலும், நீர் இருப்பு குறைவாக இருந்ததாலும் ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 89 அடியை தொட்டுள்ளது.

மேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்டா பாசனத்திற்கு உடனடியாக நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b