திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு
திருவண்ணாமலை , 26 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயிலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண க
Minister Ramesh inspects the Annamalaiyar Temple


திருவண்ணாமலை , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோயிலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையார் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள், பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள், அன்னதானக் கூடம், குடிநீர் வசதி மற்றும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பணிகளை விரைந்து முடித்து பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b