Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஓணம் பண்டிகையையொட்டி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மண்ணும் மக்களும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவை மீட்டெடுப்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பால் யாரும் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர் என்றும், அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கும் வகையில் “அனைவருக்கும் எல்லாம்” என்பதே சமூகத்தின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய மகாபலியைத் தோல்வியுற்ற மன்னராக மட்டும் பார்க்காமல், தனது ஆட்சியில் மக்களுக்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்கியவராகவும், மக்களின் இதயங்களில் இன்றளவும் வாழும் மன்னராகவும் போற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவம், சகோதரத்துவம், மகிழ்ச்சி மற்றும் அனைவருக்குமான நலன் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், “மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ